உதயகுமார் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் மோதல்


உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே நடந்த நிகழ்ச்சியில் வேறு கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு பதவி தருவதா எனக்கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலை அதிமுக பேரூர் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளர் உதயகுமார் தலைமை வகித்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி கொண்டிருந்தார்.

அப்போது இரண்டு கிளை செயலாளர்கள் நியமனம் தொடர்பாக, அங்கிருந்த நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, வேறு கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு பதவி வழங்குவதா என கேள்வி கேட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டு ஆத்திரமடைந்த உதயகுமார், வாக்குவாதம் செய்தவர்களை கண்டித்தார். முன்னாள் அமைச்சர் முன்னிலையிலேயே அதிமுகவினர் முட்டி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது : உச்சநீதிமன்றம்

பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து

முன்னோக்கி சிந்தித்தவர் பெரியார்: கமல்ஹாசன் பதிவு