தகவலறிந்து சம்பவ இடத்தை தென்காசி எஸ்.பி. சீனிவாசன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதில் கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் நடந்த திருவிழாவின்போது வெளியப்பன் மற்றும் அவரது உறவினர்களுக்கும், அதே ஊரை சேர்ந்த முத்துப்பாண்டியின் மகன் பாலமுருகனுக்கும் (27) இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வெளியப்பனும், அவரது உறவினர்களும் பாலமுருகனை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. அதன்பிறகு திருப்பூர் சென்ற பாலமுருகன், கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் வெளியப்பன் வெட்டி படுகொலை செய்யப்பட்டதால் பாலமுருகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், வெளியப்பனுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சரமாரியாக வெட்டி கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், உடந்தையாக இருந்த கூட்டாளிகள் இருவரை தேடி வருகின்றனர்.