திடீரென அவர்கள் முன்னோக்கி வந்து வழிமறித்துள்ளனர். அவர்கள் கையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததால் பதறிப்போன புஷ்பநாதன், பைக்கை போட்டு விட்டு தப்பி ஓடினார். ஆனால் அவர்கள் விரட்டி சென்று கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பநாதன் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மர்ம நபர்கள் பைக்குகளில் தப்பி சென்றனர்.
தகவலறிந்து முதுநகர் போலீசார் புஷ்பநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், புஷ்பநாதனின் உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர். தனிப்படையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதில், கொலையாளிகள் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று சென்னை சென்று, ஆலை காலனியை சேர்ந்த அஜய் (21), நேதாஜி (23) சந்தோஷ் (24) ஆகியோரை கைது செய்து, கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.