சென்னை: அதிமுக அவசர செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.