அதே நேரத்தில் மக்கள் கொடுத்திருக்கும் தீர்ப்பை தேசிய ஜனநாயக கூட்டணியும், பாஜவும் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறது. மக்கள் யோசித்துதான் தீர்ப்பு கொடுப்பார்கள். பாஜவுக்கு வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று அதிகப்படுத்தி இருக்கிறார்கள். மக்கள் ஒரு காரணத்திற்காக 40க்கு 40 என்பதை திமுக கூட்டணிக்கு வழங்கி, பாஜ இன்னும் உழைக்க வேண்டும் என்று தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள். பாஜவை பொறுத்தவரை 20 சதவீத வாக்குகள் பெற வேண்டும் என்பது இலக்கு. அதேபோல கூட்டணி கட்சியினர் சேரும்போது 25 சதவீதமாக உயரும் என கருதி கடுமையாக வேலை செய்தோம்.
அந்த வகையில் கோவையில் நான் பெற்ற 4.5 லட்சம் வாக்குகளும் பணம் கொடுக்காமல் பெற்றவை. பாஜவின் வெற்றி மூலம் அதிமுகவின் வாக்கு சதவீதத்தை குறைத்து இருக்கிறோம். அதிமுகவை பல இடங்களில் டெபாசிட் காலி செய்ய வைத்திருக்கிறோம். பல இடங்களில் பின்னுக்குத் தள்ளி இருக்கிறோம். திருநெல்வேலி, கன்னியாகுமரியில் பாஜவின் வாக்கு எண்ணிக்கை என்ன? ஆக, நாவடக்கத்தோடு பேச வேண்டும். நாம் தமிழர் கட்சி களத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை நாங்களும் பார்த்தோம். சீமான் அவர் பாதையில் பயணிக்கட்டும். நாங்கள் எங்கள் பாதையில் பயணிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.