அதிமுகவா, பாரதிய ஜனதாவா எந்தக் கூட்டணியில் சமக: சரத்குமார் பேட்டி

மதுரை: அதிமுக, பாஜ கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக சமக தலைவர் சரத்குமார் கூறினார். மதுரையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக, பாஜ கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் என்னிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். 2, 3 நாட்களில் அதுகுறித்து முடிவெடுக்கப்படும். தேர்தல் கூட்டணி குறித்து நாங்கள் யாரை ஆதரிக்கிறோம்.

யாரை சார்ந்திருக்கிறோம் என விரைவில் முடிவெடுத்து தெரியப்படுத்துகிறோம். தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணியை அறிவிக்கிறேன். வேட்பாளர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். தொழில் வளத்தை அதிகரிக்க வேண்டும். இதுவே எங்களது பிரதான கோரிக்கையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம்

ஜாமீனில் வெளி வந்த சீமான் கட்சி பிரமுகர் மேலும் ஒரு வழக்கில் கைது: விடிய விடிய விசாரணை

செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு