சென்னை: அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகை திரிஷா அறிவித்துள்ளார். “கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசும் நபர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்” என நடிகை திரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.