Tuesday, July 9, 2024
Home » அதிமுக ஆட்சியின் போது, பிரதமர் வீடு கட்டும் திட்ட செயலாக்கத்தில் ரூ.53 கோடி முறைகேடு : சிஏஜி அறிக்கை மூலம் அம்பலம்!!

அதிமுக ஆட்சியின் போது, பிரதமர் வீடு கட்டும் திட்ட செயலாக்கத்தில் ரூ.53 கோடி முறைகேடு : சிஏஜி அறிக்கை மூலம் அம்பலம்!!

by Porselvi

சென்னை : அதிமுக ஆட்சியின் போது, பிரதமர் வீடு கட்டும் திட்ட செயலாக்கத்தில் ரூ.53 கோடி முறைகேடு நடந்துள்ளது சிஏஜி என்றும் இந்திய கணக்குத் தணிக்கை துறை அறிக்கை மூலம் அம்பலமாகி உள்ளது.ஏப்ரல் 2016 முதல் மார்ச் 2021 வரை பிரதமர் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டதில் தகுதியற்ற நபர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. உதாரணமாக நாகை மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கு வழங்க வேண்டிய வீட்டை பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டது. இதே போல், மாநிலம் முழுவதும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1,547 வீடுகள் மோசடியாக வழங்கப்பட்டதால் அரசுக்கு ரூ.27.52 கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி அறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் தகுதியற்ற நபர்களுக்கு வீடுகளை வழங்க அரசு ஆவணங்களில் திருத்தம் செய்யப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சி.ஏ.ஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “அதிமுக ஆட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளியின் குடும்ப உறுப்பினர் என்று கூறி தகுதியற்ற நபர்களுக்கு 807 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.குடும்ப உறுப்பினரை மாற்றி தகுதியற்ற நபர்களுக்கு 807 வீடுகள் வழங்கியதால் அரசுக்கு ரூ.14,11 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.தகுதியற்ற குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் பிரதமர் வீடு கட்டும் திட்ட தவணைத் தொகை செலுத்தியும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது.ஈரோடு, திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் தகுதியற்ற குடும்பங்களின் வங்கிக் கணக்கில் ரூ.11.34 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களில் 3014 தகுதியற்ற குடும்பங்களுக்கு வீடுகள் முறைகேடாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த முறைகேடு உறுதி செய்யப்பட்டதால் 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 2016-21 காலகட்டத்தில் ஒப்புதல் தந்ததை விட குறைவாக கட்டப்பட்டுள்ளன. 5.09 லட்சம் வீடுகல்கட்ட ஒப்புதல் தரப்பட்டநிலையில் 2.80 லட்சம் வீடுகளே கட்டப்பட்டுள்ளன,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

seventeen − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi