அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை, தெளிவான நிலைப்பாடே எடுத்து இருக்கிறோம்: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை, தெளிவான நிலைப்பாடே எடுத்து இருக்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை: ஜெயக்குமார்

அதிமுகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்பட்டுவிட்டது; மேற்கொண்டு எதையும் பேச விரும்பவில்லை ஜெயக்குமார் என கூறினார். அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை, தெளிவான நிலைப்பாடே எடுத்து இருக்கிறோம். பா.ஜ.க. குறித்தோ அண்ணாமலை குறித்தோ எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.

கூட்டணி முறிவுக்கு பிறகு அதிமுக, பாஜகவினர் மவுனம்

பாஜகவை குறித்து எந்த விமர்சனத்தையும் முன்வைக்காமல் அதிமுகவினர் தொடர்ந்து மவுனம். கூட்டணி முறிவுக்கு பின்னர் பாஜக குறித்து அதிமுகவும் அதிமுக குறித்து பாஜகவும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் நிர்வாகிகள் மவுனம். பாஜக, அண்ணாமலை குறித்த கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல் ஜெயக்குமார் தவிர்த்தார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு