அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையனுக்கு ‘லோ சுகர்’ இருப்பதால் அடிக்கடி பர்பி சாப்பிடுவது வழக்கமாம். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்துகொண்ட பொன்னையனுக்கு லோ சுகரை தவிர்க்க ஒரு பர்பியை சாப்பிடுவதற்காக கவரை பிரிக்க முயன்றார். பல்லால் கடித்து மல்லுக்கட்டியும் அவரால் பிரிக்க முடியவில்லை.
இதனை பார்த்த திண்டுக்கல் சீனிவாசன் ‘கொடுங்க நான் பிரித்து தாரேன்…’ என்று கூறிவிட்டு அந்த பர்பியின் கவரை பிரிக்க முயன்றார். அந்த கவருடன் கடுமையாக சண்டை போட்டார். ஆனாலும் முடியல. இதை பார்த்து பக்கதுல இருந்த ஒரு புகைப்பட கலைஞர், ‘இது என்னடா அதிமுக காரங்களுக்கு வந்த சோதனனு’ நெனைச்சியிட்டு அதனை பிரித்துகொடுக்க, பர்பியை வாங்கி பொன்னையன் சாப்பிட்டார்.