சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார். அம்மா உணவகங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதல்வரின் பெருந்தன்மையை பாராட்ட பழனிசாமிக்கு மனமில்லை. பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி புலம்பித் தவிக்கிறார். கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் தனிப்பெருந்தலைவராக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார். மக்கள் நலன் ஒன்றையே மனதில் வைத்து நாளும் தொண்டாற்றும் மனிதநேயராக முதலமைச்சர் திகழ்கிறார் என அவர் கூறினார்.