சென்னை: அதிமுக, பா.ஜ.க. இரு கட்சிகளும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தன என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். மாநிலங்களவை சீட் தர அதிமுக மறுத்ததாக வெளியான தகவல் உறுதிப்படுத்தப்படாதது. அனைத்து கட்சிகளுக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இருப்பதால் எங்கள் கட்சிக்கும் கேட்கிறோம். மாநிலங்களவை சீட் கேட்பது எங்கள் உரிமை என்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடரும் என்றும் பிரேமலதா கூறியுள்ளார்.