திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி புறவழிசலையில் அதிமுகவினர் கொண்டு சென்ற பேனர் விழுந்து பைக்கில் சென்ற பெண் காயம் அடைந்துள்ளார். திருப்பதி செல்லும் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்றப்பதற்காக கொண்டு சென்ற பேனர் விழுந்ததில் பைக்கில் சென்ற கீர்த்தனா என்பவர் காயமடைந்துள்ளார். ஆட்டோவில் அதிமுகவினர் கொண்டு சென்ற பேனர் விழுந்ததில் இளம்பெண் கீர்த்தனா கால் முறிந்து படுகாயம் அடைந்துள்ளார்.
இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற ரேஷ்மா காயமின்றி தப்பிய நிலையில் பின்னல் அமர்ந்து சென்ற கீர்த்தனா காயமடைந்துள்ளார். பேனர் விழுந்தது காயமடைந்த கீர்த்தனா, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவினர் கொண்டு சென்ற பேனர் விழுந்தது இளம்பெண் காயமடைந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே புலவன்காடு பகுதியில் நேற்று அதிமுக பேனர் விழுந்தது பைக்கில் சென்றவர் படுகாயம் அடைந்துள்ளார். பொய்யுண்டார் குடிகாடு பிரிவு சாலையில் எடப்பாடியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த 50 அடி உயர பிளக்ஸ் பேனர் சரிந்து கபில்தேவ் மீது விழுந்தது. இதில் அவருக்கு தலை, காது உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.