சென்னை: செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழித் தொழில் நுட்பத்துக்காக மாநாடு நடத்துவது தமிழ்நாடு அரசுதான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஓலைச்சுவடி காலம் முதல் ஆண்ட்ராய்டு காலம் வரை அனைத்திலும் கோலோச்சும் மொழியாக அன்னைத் தமிழ் இருப்பது பெருமை எனவும் கணித்தமிழ் மாநாடு நிறைவுற்றதையடுத்து முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.