ஆண்டுதோறும் பணி நீக்கத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஐடி துறையில் அதிகரித்து வரும் ஏஐ பயன்பாடு தான் இதற்கு காரணம் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஐடி துறையில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணிகளை வேகமாக முடிக்க தெரிந்தோருக்கான வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. எனவே தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் பழைய பாடத்திட்டத்தை மாற்றி தற்போதைய தேவைக்கேற்ப செயற்கை நுண்ணறிவு அதன் மூலம் கோடிங் செய்வது உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.