விவசாய நிலத்தில் மோட்டாரை இயக்கிய கணவன், மனைவி மின்சாரம் தாக்கி பலி

மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே மேல்வலையாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(48), விவசாயி. இவரது மனைவி அம்பிகாபதி (45). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்று அதிகாலை பெரியசாமி மனைவியுடன் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்று, அங்குள்ள மின்மோட்டாரை இயக்கி உள்ளார். இதில் மின்கசிவு ஏற்பட்டு அவரை மின்சாரம் தாக்கியது. அருகில் நின்றிருந்த மனைவி அம்பிகாபதி, கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்

இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்!