இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்லன்குழி கிராமத்தில் நுழைந்த ஒற்றை காட்டு யானை விவசாய தோட்டத்தில் இருந்த பயிர்களை சேதப்படுத்துவதைக் கண்டு அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் ஒன்று சேர்ந்து டார்ச் லைட் வெளிச்சத்தில் யானை நடமாட்டத்தை கண்டுபிடித்து டிராக்டரை பயன்படுத்தி ஒரு மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.