டெல்லி: ஆட்சிக்கு வந்தால் விவசாய உபகரணங்களுக்கான 5-12% ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் நியாயமாக இருக்க வேண்டுமென நினைக்கிறார்கள். ‘கோரிக்கையை முன்வைத்து டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது மோடி அரசு கண்ணீர் புகை குண்டு வீசியது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு 10 கிலோ தானியங்களை இலவசமாக வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.