ஆக்ரா: உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ரா அருகே உள்ள பெலன்கஞ்ச் பகுதியில் 25 வயது தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அவரை தூக்கில் தொங்கவிட்டு கொடூரமாகக் கொலை செய்த ராகவேந்திர சிங்(27) என்ற காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். ராகவேந்திர சிங் வீட்டின் கூரையில் இருந்து அப்பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டது. டிசம்பர் 29ம் தேதி கொலை நடந்த நிலையில், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்துகிறது.