ஜூன் 1ம் தேதிக்குள் மக்கள், தங்களை கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும், அதுவரை தடை உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும் ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. கர்நாடகா உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், பொதுமக்களிடம் கருத்து கேட்பது சட்டப்படி தவறானது. நிபுணர்கள் அடங்கிய புதிய குழுவை அமைத்து தான் கருத்து கேட்கும் நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்று கூறி, இந்திய கென்னல் கிளப் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், கருத்து கேட்கும் நடைமுறை தொடரலாம். ஜூன் 14ம் தேதி வரை எந்த இறுதி முடிவும் எடுக்க கூடாது என்று ஒன்றியஅரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.