சென்னை: வாக்கு எண்ணிக்கை அன்று முகவர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் அதிமுக, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்ட சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.