30 வயது நெருங்குகிறதா? உஷார்!

முப்பது வயதிலும் அழகோடு இருக்க வேண்டுமா? சுறு சுறுப்போடு இருக்க வேண்டுமா? இதோ… அதற்கான வழிகள்…
*தன்னம்பிக்கை தான் முதலில் அழகின் அடிப்படை, முப்பது வயதிலும் பதினெட்டு வயது போல் இருக்கலாம்.
*உணவில் கவனம் தேவை. அதிக அளவு உப்பு மற்றும் சர்க்கரை அழகைக் கெடுக்கும்.
*புத்தம் புதிய பழங்களைச் சாப்பிடுங்கள். தண்ணீர் அடிக்கடி அருந்தத் தவறாதீர்கள்.
*கட்டுப்பாடான சாப்பாடு, கட்டுக் கோப்பாக வைக்கும்.
*விளையாட்டுகளில் கவனம் செலுத்துங்கள். சாதாரண ஜாகிங், டென்னிஸ், நீச்சல் ஆகியவற்றை கடைபிடியுங்கள்.
*கண்களின் அருகே விழும் கருவளையம் சுருக்கங்கள் அழகைக் கெடுக்கும். வறட்சியான உங்கள் சருமம் தான் காரணம். அதற்கு தினமும் தூங்குவதற்கு முன் கிளென்சிங் மில்க் மூலம் கண்களை சுற்றி சுத்தம் செய்து ஐ க்ரீம் தடவினால் சரியாகும். தோல் வறட்சியாக இருப்பதும் ஒரு காரணம்.
*அதிக எடை, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, மாஸ்சரைஸர் தடவாதது, அதிக நேரம் வெயிலில் இருப்பது போன்றவையால் கூட தோல் வறட்சியாகும். இதற்கு தினமும் தூங்கும் முன் நல்ல க்ரீமை கழுத்தில் தடவுங்கள். பகலில் மாய்சரைஸர் (அ) சன்ஸ்கிரீன் லோஷன் தடவுங்கள்.
* மேக்கப் போடுபவர்கள் தினமும் அதை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும். ஏய்ஸ்ட்ரிெஜன்ட் மூலம் ஜாக்கிரதையாக சுத்தம் செய்யவும். லேசான மேக்கப் போடுங்கள்.
*நான்கிலிருந்து ஆறு வாரத்திற்கு ஒரு முறை முடியை அழகுப்படுத்தவும். முடிக்கு ஏற்ற ஷாம்பு மற்றும் கண்டிஷனர் உபயோகிக்கவும். எண்ணெய் பசை உள்ள முடி உள்ளவர்களுக்கு ஒட்ட வெட்டிய சிறிய ஹேர்கட் செய்தால் போதும்.
– ஜெ.ரவிக்குமார்

Related posts

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 102 டிகிரி வெயில்

தோகா விமானங்கள் தாமதம் சென்னை விமான நிலையத்தில் 320 பயணிகள் கடும் அவதி

தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்ல முயன்ற 61 பேர் கைது