ஆந்திர: பீகார் மாநிலத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது. ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஆந்திர அமைச்சர் சீனிவாசவேணுகோபால் கிருஷ்ணா தகவல் தெரிவித்துள்ளார். முதலில் 139 பிற்படுத்தப்பட்ட பிரிவினரை மட்டும் கணக்கெடுக்க திட்டமிட்டு இருந்தோம். தற்போது அனைத்து பிரிவினரையும் கணக்கெடுக்க உள்ளோம். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் முடிவடையும் என்று கூறியுள்ளார்.