50 வருடங்களுக்கு பிறகு காவேரி வன விலங்கு சரணாலயத்தில் புலிகள் தென்பட்டன

ஓசூர்: காவேரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தில் ஓசூர் வனக்கோட்டத்தில் ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் 50 வருடங்களுக்கு பிறகு இரண்டு புலிகள் தென்பட்டது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.

ஜூவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் 4 முதல் 5 வயதுள்ள மற்றும் 8 முதல் 9 வயதுள்ள இரண்டு ஆண் புலிகளின் புகைப்படங்கள் பதிவாகி உள்ளதாக ஓசூர் வன உயிரினக்காப்பாளர் செல்வி. கார்த்திகாயினி தெரிவித்ததாக தலைமை வன உயிரினக்காப்பாளர் . ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் ஜனவரி 2024- இல் பொருத்தப்பட்ட கேமரா பதிவுகள் மூலம் இந்த இரண்டு புலிகளின் புகைப்படங்கள் பதிவாகி ஜுவாலகிரி காப்புக்காடுகள் உள்ளது சரகமானது.

செய்யப்பட்ட காவேரி தெற்கு வன உயிரின தெரிய வருகிறது. சமீபத்தில் அறிவிக்கை சரணாலயத்தையும் ஒட்டி அமைந்துள்ள தொடர் பாதுகாக்கப்பட்ட இந்த வனப்பகுதியில் புலிகளின் நடமாட்டம் காணப்படுவது, பன்னார் கட்டா தேசிய பூங்கா மற்றும் அதன் அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இருந்து புலிகள் இங்கு வசிக்க உகந்த வனப்பகுதியாக மாற தமிழ்நாடு அரசு வன உயிரினங்களைப் பாதுகாக்க எடுத்துவரும் வெற்றிகரமான நடவடிக்கைகளே காரணமாகும்

Related posts

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!

பல சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேக்கம்; நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக இடி, மின்னலுடன் மழை: பலத்த காற்றால் 5 மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் துண்டிப்பு, குடிநீர் விநியோகம் பாதிப்பு