இவர்கள் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் காவலில் வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக ஒன்றிய அரசு ஆப்பிரிக்க அரசுடன் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகளை அடுத்து, அபராதம் விதிக்கப்பட்டது. அதனை செலுத்திய பிறகு அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் கப்பலும், பணியாளர்களும் மே 27ம் தேதி விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் 16 இந்தியர்கள் நேற்று நாடு திரும்பினர்.