கூலி தொழிலாளி வீட்டில் தீ விபத்து

மங்களூரு: மங்களூரு அருகே, சசிஹிட்லு பகுதியில் உள்ள கூலி தொழிலாளிக்கு சொந்தமான வீடு தீப்பிடித்து எரிந்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. மங்களூரு அருகே சசிஹித்லுவை சேர்ந்தவர் சாரதா மோகன். கூலி தொழிலாளியாக உள்ளார். சம்பவத்தன்று காலை வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் அவரின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த அப்பகுதியினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதற்கு முன்னர் ஹளேயங்காடியை சேர்ந்த ஜே.கிருஷ்ணா கோட்டியன் என்பவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, டேங்கர்லாரியில் தண்ணீரை வரவழைத்து தீயை அணைக்க முயன்றார். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து ஓட்டு வீடு என்பதால் மின்கசிவு ஏற்பட்டு எரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரியவந்துள்ளது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு