அகமதாபாத்: ரூ.2.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்திய ஆப்கானிஸ்தான் நபரை குஜராத் தீவிரவாத தடுப்பு படை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தீவிரவாத தடுப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு கடல் வழியாக 8 கிலோ ஹெராயின் போதை பொருள் இந்தியாவுக்கு கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட போதை பொருள் டெல்லி திலக் நகரில் உள்ள ஒரு நபருக்கு விற்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குஜராத் தீவிரவாத தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, இந்த கடத்தலில் ஒரு நைஜீரிய பிரஜை மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சாகிப் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தீவிரவாத தடுப்பு படையினர் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள போகல் பகுதியில் அதிரடி சோதனை நடத்தி சாகிப்பை கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.2.5 கோடி மதிப்பு உள்ள 460 கி. ஹெராயினையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ரூ.2.5 கோடி ஹெராயின் கடத்திய ஆப்கன் ஆசாமி டெல்லியில் கைது
previous post