இப்ராகிம் 70 ரன் (46 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), குர்பாஸ் 76 ரன் (45 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். அதன் பிறகு வந்தவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, ஆப்கான் 20 ஓவரில் 5விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது. முகமது நபி 14 ரன், கேப்டன் ரஷீத் கான் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். உகாண்டா பந்துவீச்சில் காஸ்மஸ் கீவுடா, பிரையன் மசாபா தலா 2 விக்கெட், அல்பேஷ் ராம்ஜனி 1 விக்கெட் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து, 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அறிமுக அணியான உகாண்டா உற்சாகமாகக் களமிறங்கியது. முதல் முறையாக உலக கோப்பையில் விளையாடும் உகாண்டா வீரர்கள், ஆப்கான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுத்தனர். ஆனாலும் 16 ஓவர் வரை தாக்குப்பிடித்த உகாண்டா வெறும் 58 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக ராபின்சன் ஒபுயா 14 ரன் (25 பந்து, 1 சிக்சர்), ரியாசத் அலி ஷா 11 ரன் (34 பந்து) எடுத்தனர். ஆப்கான் தரப்பில் ஃபசல்லாக் ஃபரூகி 4 ஓவரில் 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் அள்ளினார். நவீன் உல் ஹக், ரஷீத் கான் தலா 2 விக்கெட், முஜீப் உர் ரகுமான் 1 விக்கெட் எடுத்தனர். சிறந்த வீரராக ஃபசல்லாக் தேர்வானார். ஆப்கான் 125 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.