இதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. 2023 டிசம்பரில் சி.ஏ.ஜி. அளித்த அறிக்கையில், ஒன்றிய நெடுஞ்சாலைத்துறையின் 7 திட்டங்களை ஆய்வு செய்ததில், ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டிருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை எழுப்பி வரும் நிலையில், எந்த நடவடிக்கையையும் எடுக்காத பாஜ அரசு நெடுஞ்சாலைத்துறையில் மீண்டும், சுங்கக் கட்டணத்தை உயர்த்திருப்பது கண்டிக்கத்தக்கது.