பின் 46 ஆடு செம்மறி ஆடு பலியிட்டு, கைக்குத்தல் அரிசியில் சாதம் தயாரிக்கப்பட்டது. பின் பச்சரிசி சாதம் உருண்டைகளாக உருட்டி எல்லைப்பிடாரி அம்மனுக்கு படைக்கப்பட்டது. இதையடுத்து நடந்த கறி விருந்தில் ஆண்கள் அனைவரும் பங்கேற்றனர். மேலும், இங்குள்ள எந்த பொருளையும் பெண்கள் பார்க்க கூடாது என்பதால், மீதமிருந்த சாப்பாடு, விபூதி, பூஜை பொருட்கள் அனைத்தும் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது. ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருவிழாவில் கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.