திருவாரூர்: தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழை கேந்திரிய வித்யாலயா பள்ளி புறக்கணித்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவாரூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விளம்பரத்தில் தமிழ் மொழியை புறக்கணித்தது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே மாணவர் சேர்க்கை விளம்பரம் வெளியிட்டுள்ளது.