திமுக சார்பில் ‘இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்’ என்ற விளம்பரங்களுக்கு முன் அனுமதி பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அனுப்பப்பட்டது. விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதாக கூறி ஏப்.4ம் தேதி அனுமதி மறுக்கப்பட்டது. எனவே தேர்தல் ஆணையம் நியாயமாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும் என்றும், திமுகவின் விளம்பரங்கள் தொடர்பான அனுமதி விண்ணப்பங்களை நிராகரித்த தேர்தல் அதிகாரி உத்தரவை ரத்து செய்து அனுமதிக்க உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முன்பு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.