Saturday, June 29, 2024
Home » கள்ளதொடர்பு விவகாரம்; கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை: கள்ளக்காதலன், கணவர் கைது

கள்ளதொடர்பு விவகாரம்; கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை: கள்ளக்காதலன், கணவர் கைது

by MuthuKumar

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் மைத்துனருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் கணவர் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த பெண் கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கு தூண்டியதாக கள்ளக்காதலன், கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வண்ணாரப்பேட்டை சஞ்சீவி ராயன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (42). பெயின்டர். இவரது மனைவி விஜயசாந்தி (41). வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் உள்ள பிரபல துணிக் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகளும், 10ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். சரவணனின் தங்கை கணவர் மற்றொரு சரவணன்.

நேற்று முன்தினம் காலை விஜயசாந்தி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடலை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் விஜயசாந்தியை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே விஜயசாந்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து தண்டையார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, பெயின்டர் சரவணன், வெளிநாட்டில் வேலை செய்தபோது, தனது தங்கை கணவரான மெக்கானிக் சரவணனுக்கு பணம் அனுப்பி தனது மனைவியிடம் கொடுத்துவிடும்படி கூறியுள்ளார். அதன்படி அவர், பணத்தை கொடுக்க அடிக்கடி வீட்டுக்கு சென்றபோது மெக்கானிக் சரவணனுக்கும் (40) விஜயசாந்திக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் வெளிநாட்டில் இருந்த பெயின்டர் சரவணனுக்கு தெரியவந்துள்ளது.

இதனால் மனைவி மீது கோபமடைந்த பெயின்டர் சரவணன், கடுமையாக திட்டி வந்துள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த விஜயசாந்தி, சம்பவத்தன்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் கைப்பற்றிய கடிதத்தில், ‘எனது கணவர் சரவணனும், கள்ள தொடர்பில் இருந்த சரவணனும்தான் என் சாவுக்கு காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் வண்ணாரப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

15 + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi