இதற்கிடையில் நேற்று சகோதரர்களிடம் பாசத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் தினம் கொண்டாடப்பட்டது. மாணவி, தன் தம்பிக்கு ராக்கி கட்ட நினைத்தார். தொடர்ந்து, காலையில் மாணவி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு அவரது தம்பியை அழைத்துள்ளார். அதன்படி அங்கு வந்த தம்பிக்கு மாணவி ராக்கி கட்டி நெற்றியில் குங்குமம் வைத்து தன் அன்பைக் காட்டினாள். மேலும், அப்பா, அம்மாவை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய சிறிது நேரத்தில் மாணவி தன் உயிரை விட்டார். தான் சாகப்போகிறேன் என்று மாணவிக்கு தெரிந்து, தம்பிக்கு கடைசியாக ராக்கி கட்டியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.