குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளிப்பு


ஆவடி: ஆவடியை அடுத்த திருநின்றவூர், ராமதாசபுரம் பகுதியைச் சேர்ந்த சரண் (25) நடன பயிற்சியாளராக உள்ளார். இவர் தன்னுடன் பணியாற்றிய 20 வயது நடன பயிற்சியாளருடன் காதல் வயப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்து இருவரும் தனியாக வசித்து வந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணங்களால் இவர்களுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம், வழக்கம்போல் மீண்டும் தகராறு வெடித்தது. அப்போது, இருசக்கர வாகனத்திற்கு ஊற்ற வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி, சரணின் மனைவி தீ வைத்துக்கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டவுடன், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அக்.3 முதல் 12ம் தேதி வரை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க 125 முதலைகளை மின்சாரம் பாய்ச்சி கொன்ற பண்ணையாளர்: தாய்லாந்தில் விநோதம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 4 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்