சென்னை: சென்னையில் 27 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கபாலீஸ்வரர் கோயில் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இரவில் இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்ற கோயில் ஊழியர் தங்கராஜ், தவறாக நடந்து கொண்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆத்திரமடைந்த இளம்பெண் தங்கராஜை ஒரு சலூனுக்கு அழைத்துச் சென்று மொட்டை அடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார். தினமும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து தங்கராஜை சொந்த ஜாமினில் போலீசார் விடுவித்தனர்.