அதேநேரம், இரு வழக்குகளை ரத்து செய்ய மறுத்து உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் மேல்முறையீடு செய்தார். அதில், ‘முதல்வரை நேரடியாக விமர்சிக்கவில்லை. தமிழ்நாடு அரசை மட்டுமே விமர்சித்ததுள்ளேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே என் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இரு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இன்று இவ்வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘மக்கள் பிரதிநிதிகளாக இருந்து கொண்டு, இதுபோன்ற மோசமான பேச்சை சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.
அவர் ஏன் மன்னிப்பு கேட்கக் கூடாது? எதிர்காலத்தில் இதுபோன்று பேசமாட்டேன் என்று எழுதித் தர வேண்டும். சி.வி.சண்முகத்தின் பேச்சு மன்னிக்க முடியாத குற்றமாகும். அவரது பேச்சு மோசமானவை. பொறுப்புடன் இனி செயல்பட வேண்டும். பொதுநலன் கருதி சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வழக்குகளை 100% ரத்து செய்ய முடியாது. தவறை உணரவில்லை என்றால், வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். ’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் அக். 15ம் தேதிக்கு ஒத்திவைத்தும், இடைப்பட்ட காலத்தில் சி.வி.சண்முகம் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.