அதிமுகவினர் திமுகவுக்கே வாக்களித்துள்ளனர் : சிபிஎம்

சென்னை : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் தெளிவாக முடிவெடுத்து வாக்களித்துள்ளார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “அதிமுகவின் தலைமையை மீறி விக்கிரவாண்டி தேர்தலில் திமுகவுக்கு அக்கட்சியினர் வாக்களித்துள்ளார்கள். அதிமுகவின் தலைமையை மீறி அக்கட்சியினர் வாக்களித்துள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அடி. திமுக கூட்டணிக்கு மகத்தான எதிர்காலம் உள்ளது என்பதை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு உணர்த்தி உள்ளது,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்

கோவை மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் சிக்கிய கார், பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது

செப் 10: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை