சென்னை: சென்னை மண்டலத்திற்குட்பட்ட 17 மாவட்டங்களில் சென்னை தெற்கு, சென்னை மத்தியம், சென்னை வடக்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மதுபான கடைகளுடன் இணைந்த மதுக்கூடத்திற்கான உரிமம் கடந்த 31.08.2022 அன்றுடன் முடிவடைந்தது. மதுக்கூட உரிமையாளர்கள் நீதிமன்றத்திற்கு சென்றதால் அடுத்த டெண்டர் கடந்த ஓராண்டிற்கு மேலாக நடத்தப்படாமல் இருந்தது. இப்பொழுது நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு முடிவுற்ற நிலையில் டாஸ்மாக் நிறுவனம், இ-டெண்டர் மூலம் மதுக்கூடத்திற்கான டெண்டரை நடத்த முடிவு செய்து கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் தொடங்கி நாளை (27ம் தேதி) வரை விண்ணப்பிக்க மதுக்கூட உரிமைகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இ-டெண்டர் மூலம் விண்ணப்பிக்கும் போது மதுக்கூட உரிமையாளர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தையும் டாஸ்மாக் நிறுவனம் தெளிவுபடுத்தும் என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.