புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டசபைத் தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது ஊழல் தடுப்பு இயக்குனரகம் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.