சென்னை: சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரிய வழக்குகள் ஜூன் 25-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிடம் கோரப்பட்டுள்ள தகவல்கள் கிடைத்த பின் முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பு செய்வது குறித்து சபாநாயகர் ஆய்வு செய்து வருவதாக தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார்.