ஆதித்யா L1 விண்கலம் வெற்றிகரமாக பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெளியே பயணித்து வருவதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து 9.2 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து லெக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி விண்கலம் பயணிக்கிறது. 2வது முறையாக பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெளியே விண்கலத்தை செலுத்தி இஸ்ரோ சாதனை புரிந்துள்ளது