சென்னை: சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோயிலில் இருந்து அறநிலையத்துறை சார்பில் ஆன்மிக சுற்றுலா பேருந்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: ஆடி மாத அம்மன் கோயில்களுக்கு குறைந்த கட்டணத்தில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. காளிகாம்பாள் கோயிலிலிருந்து 10 அம்மன் கோயில்களுக்கு புறப்பட்ட ஆன்மிக சுற்றுலாவில் 47 பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னையில் 2 பயண திட்டங்களாக ரூ.1,000 மற்றும் ரூ.800 ஆகிய கட்டணங்களில் செயல்படுத்தப்படுகிறது.