அத்துடன், ஆணையத்திற்கு அலுவலகமும், அண்ணாசாலையில் தனி அலுவலகமும் ஒதுக்கி, ரூ.27 லட்சத்தில் புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க ஆணையிட்டு, மேலும் நிதியாக ரூ.2.30 கோடியும், அலுவலர் மற்றும் பணியாளர்கள் 48 பேர் நியமிக்கப்படவும் நிதி ஒதுக்கினார். மேலும் இந்த ஆணையத்தின் முந்தைய தலைவரும், சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான சிவகுமார் கடந்த மே மாதம் 11ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பதுடன், ஆணையத்தின் புதிய தலைவரை வாழ்த்தி, வரவேற்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.