சிவகங்கை: சிவகங்கையில் உள்ள ஆதி கோரக்கநாதர் கோயில் குடமுழுக்கு விழாவை திட்டமிட்டபடி நடத்தி கொள்ளலாம் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். குடமுழுக்கு விழாவுக்கு யாரேனும் இடையூறு செய்தால் நீதிமன்றத்தை எந்த நேரத்தில் அணுகலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். குடமுழுக்கு விழா திருப்பணிக்கு தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால தடையை நீக்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.