வினாடிக்கு 1,130 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தநிலையில், வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், 7 பிரதான மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து வெளியேறி பாசன கால்வாய் வழியாக பாய்ந்தோடுகிறது. பாசன கால்வாய் வழியாக அதிகபட்சமாக 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட முடியும்.
தற்போது 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கால்வாய் நிரம்பியபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே பொதுமக்கள் யாரும் கால்வாயில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் வைகை அணைக்கான நீர்வரத்தும் குறைந்துள்ளது.