அதன்படி, கேளம்பாக்கத்தில் நடைபெற்ற பள்ளி திறப்பு விழாவில், ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் திவ்யா வினோத் கண்ணன் முன்னிலை வகித்தார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், புதிய பள்ளி கட்டிடத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் அனாமிக்கா ரமேஷ், ஒன்றிய ஆணையாளர் பூமகள் தேவி, தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பையனூர் சேகர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நெல்லிக்குப்பம் ஊராட்சி அம்மாபேட்டை கிராமத்தில் நடைபெற்ற பள்ளி திறப்பு விழாவில், ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி, ஒன்றிய கவுன்சிலர் வெண்ணிலா நந்தகுமார், திமுக நிர்வாகிகள் கெஜராஜன், ராஜவேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.