இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஏகலைவா உண்டு உறைவிட பள்ளி கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், 136 மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
இதனை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் முன்னிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாணவ, மாணவிகளுடன் தங்கும் வசதி, உணவு, இருப்பிடம், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து கலந்துரையாடினார். அப்போது, அவருடன் ஆதிதிராவிடர் நல அலுவலர் வெற்றிகுமார், தாட்கோ பொது மேலாளர் தபசுகனி, வண்டலூர் தாசில்தார் புஷ்பலதா உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.