சென்னை: கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபடவேண்டிய தருணமிது. கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்க மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கமல் பதிவிட்டுள்ளார்.