பாஜ ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக இருந்தது இல்லை. இப்போது மட்டுமல்ல எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படாது. அதே நேரத்தில் யாரையும் சிறப்பு குடிமக்களாக ஏற்க முடியாது. அனைவரும் சமம். கடந்த பல ஆண்டுகளாக அதானி-அம்பானி விவகாரத்தை தொடர்ந்து ராகுல்காந்தி எழுப்பி வந்தார். ஆனால் தேர்தல் தொடங்கியதும் திடீரென அவர்களது பிரசார தொனி மாறிவிட்டது. இந்த திடீர் மாற்றம் ஏன்? எனது கருத்தை உடனடியாக அதிர்ரஞ்சன் சவுத்ரி ஊர்ஜிதம் செய்துள்ளார். அதானி-அம்பானி டெம்போவில் பணத்தை அனுப்பினால் அவர்கள் குறித்து பேசமாட்டோம் என்று ஒப்புக்கொண்டுள்ளார். அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவை எந்த தலையீடும் இன்றி சுதந்திரமாக பணியை செய்ய அனுமதிக்க வேண்டும்” என்றார்.
* அங்கேயும் நாங்கதான் இங்கேயும் நாங்கதான்
பிரதமர் மோடி கூறுகையில்,’ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது, மக்களவையில் பா.ஜ கூட்டணி 400 இடங்களைத் தாண்டும்.தெற்கில் பாஜ தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். கடந்த முறை இருந்ததை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம். கிழக்கு இந்தியாவில் கூட பா.ஜவுக்கு பெரும் ஆதரவு பெருகி வருவதை நாங்கள் காண்கிறோம். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கில் இருந்து அதிக இடங்களைப் பிடிப்போம்’ என்றார்.